- TN MHC RECRUITMENT 2020 | சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ள P.A, P.C வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.02.2021 | Click Here

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இம்முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். 1870 பணியிடங்களுக்கு நடந்த இந்த தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
D.E.O to C.E.O Promotion | தமிழக பள்ளிக்கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அலுவலர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். செய்யார் மாவட்ட கல்வி அலுவலர் சி.சண்முகம் பதவி உயர்வு பெற்று, ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலராக (SSA) நியமிக்கப்படுகிறார். ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பொ.அருண்பிரசாத், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்படுகிறார்.
பத்தாம் வகுப்பிற்கு பிறகு நேரடியாக டி.டி.எட் படித்து இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பின் நகல் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் டூ படிக்கவில்லை என்பதை காரணம் காட்டி இந்த கல்வியாண்டில் இவர்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள்,4937 ஆய்வக உதவியாளர்கள், 2108 இளநிலை உதவியாளர்களை நியமிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் அடங்கிய, 3,475 பதவிகளை நிரப்ப, அக்டோபர், 15 முதல், 20 வரை, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு நடந்தது. இதில், 2,811 தேர்வர் மட்டுமே, வெவ்வேறு பதவிகளுக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவுகளை பெற்றனர்.மீதமுள்ள, 664 பதவிகளுக்கு, விண்ணப்பதாரர்கள் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால், அந்த காலி பணியிடங்களை நிரப்ப, இம்மாதம், 10,12 தேதிகளில், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், மீண்டும் கலந்தாய்வு நடக்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11-ஆம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு 15.11.2012 முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணிநியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும்.
TRB TET REEXAM RESULT | TRB TET தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில் 10 ஆயிரத்து 187 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2வது தாளில் 8,793 பேர் தேர்ச்சி அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேர் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)