Kalvisolai No 1 Educational Website in Tamil Nadu | Pallikalvi News | Tamil Educational News Website | TET Study Material | TRB Study Materials | SSLC Study Materials | PLUS TWO Study Materials | Online Test | Plus Two Question Papers | SSLC question Papers | TNPSC Study Materials

KALVISOLAI WHATSAPP

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். என தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் உரை நிகழ்த்தினார். அதன் முழு விவரம் ...

Share:

65 comments:

  1. Doubts regarding PG PHO(Phy Handicapped) appointment:

    1.For filling 6 (1% out of 601 posts) PG PHO TAMIL (Phy handicapped) seats - why 63 PHO TAMIL candidates verified in C.V-2? Even if it is 1:2 only 12 PHO TAM should be verified.

    2.For filling 2 (1% out of 170 posts) PG PHO HISTORY(Phy handicapped) seats - why 25 PHO HISTORY candidates verified in C.V-2? Even if it is 1:2 only 4 PHO HISTORY should be verified.

    [Whether the govt have any idea of filling more PHO posts on humanitarian as filled in 2008-2009 for 72 Visually impaired candidates without following any communal reservation & no of posts by passing special G.O?]

    If anybody know about this - kindly add comment.

    Siranjeevi P
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete
  2. Kind attention to C.V-2 PG Candidates:

    Congrates for all PG selected Candidates.

    At last TRB published only 2308 PG candidates - out of 2895 candidates. Remaining seats are filled for withheld PG BOTANY & tamil medium candidates.
    In the Final Selection Notification - Board mentioned as follows.

    '151441 candidates appeared for the written examination. Out of this, 8420 candidates were absent for the Examination and 143021 candidates attended the written Examination. After completion of written Exam, the Board released the list of 3103 candidates and they were called for Certificate Verification in the Teachers Recruitment Board website on 29.07.2012. The Certificate Verification was conducted on 03.08.2012.

    As per the direction of Hon’ble High of Court of Madras dated 01.10.2012, the Board revised answer keys for all subjects and revalued OMR answer sheets of all the candidates appeared for the written Examination and the merit list was released in the website on 18.10.2012. Based on the revised merit list 6267 were called for Certificate Verification on 30.10.2012.'

    Note that even in the court judgement dated 01.10.2012 - High court recalled the words from the TRB PG Notification in their judgement 1st page as - 'If more than one candidate secures the lowest or same cut-off mark for the particular communal turn, all such candidates will be called for certificate verification and so the number of candidates called for certificate verification will be slightly higher than the number of vacancies.'

    From the above lines - we conclude that - Board never mentioned the allotted no of posts as 2895 & called verification as 1:2 even in the final selection list. Also didn't mentioned 2308 posts selected now out of 2895 only. This indicates the idea of filling Extra 2491 PG posts(upgraded shools 100 x 9 posts=900 + Recent C.M announced 1591 posts) along with 2895 posts in C.V-2 PG candidates.

    But the board called for verification in most of the PG subjects as exactly/nearly 1:2(Ex: for 50 posts they called 100 or 101 or 99). However as per the PG Notification published (even the same line mentioned in High court PG judgement copy dated 01.10.2012-page 2) as - 'the number of candidates called for certificate verification will be slightly higher than the number of vacancies'. So that we conclude that - the verified list is not 1:2. Since the existing vacancies for PG is more than 6000 - we assume that board called in C.V-2 as 6267.

    Govt have more chance to pass G.O for additional posts in this same PG recuitment. Then Board will add the above 2491 posts(900+1591) & recruit from the 2nd C.V list(nearly 3000).

    Hope that all pending works (Botany writ, filling Tamil medium posts, G.O for additional posts) shall be done before the announcing PG counselling date in 10 days (or as announced by board in Jan 2013 in selection notification as - 'on humanitarian consideration give another chance to the absentees and those who have not produced Certificates in January 2013').

    Sources from Education dept said that - higher chances to consider & recruit 2nd list from the C.V-2 candidates. So that, all c.v-1 candidates + 1st half of the C.V-2 candidates or more have opportunity for getting appointment based of the number of vacancies to be filled in particular subject & additional announcement of posts. (But note that - there is no chance to fill all 6267 PG candidates)

    All the above information is only assumption & gathered news. But have more chance to become true.

    Siranjeevi P
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete
  3. TET நியமன உத்தரவுகளை வழங்க தடை விதிக்க மனு: அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்கவும், ஆசிரியர் நியமனங்கள் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு
    பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் தேர்வை, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வழிமுறைப்படி நடத்தக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    இந்த மனுவுக்குப் பதிலளிக்கும் படி, அரசுக்கு, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது. "மனு மீதான, இறுதி உத்தரவைப் பொறுத்து, நியமனங்கள் அமையும்" எனவும் உத்தரவிட்டது.
    சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர் எம்.பழனிமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தகுதி தேர்வில், மூன்று லட்சத்து, 73 ஆயிரத்து, 696 பேர், கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 8,808 பேர்,தேர்ச்சி பெற்றனர்.
    தேர்வு முடிவை, ஜாதி வாரியாகவும், பாட வாரியாகவும், வெளியிட தவறி விட்டனர். இதில், உள்நோக்கம் உள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மாற்று திறனாளிகளுக்கு, உண்மையை மறைத்துள்ளனர்.
    கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம், ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில், ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தகுதிமதிப்பெண்ணில், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகளுக்கு, ஐந்து சதவீதம் தளர்த்தப்பட்டது. அதன்படி, ஆந்திராவில், 10 சதவீதம், ராஜஸ்தானில், ஐந்து சதவீதம், தளர்த்தப்பட்டுள்ளது.
    ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், தகுதி மதிப்பெண் தளர்வு பற்றி, எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றாமல், தேர்வு நடத்துவது, முடிவை வெளியிடுவது, தவறானது.
    எனவே, நியமன உத்தரவுகளை வழங்க, தடை விதிக்க வேண்டும். தேசிய கவுன்சிலின் வழிமுறைகளை பின்பற்றி, பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்த, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.
    இம்மனு, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்" முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, இரண்டு வாரங்களுக்கு, "முதல் பெஞ்ச்"தள்ளிவைத்தது.
    "நியமனங்கள் எதுவும், ரிட் மனு மீதானஇறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்" என, "முதல் பெஞ்ச்" உத்தரவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. "TET Marks Relaxation Must" - Related Full Collection of Documents

      visit to this link ------>

      http://www.padasalai.net/2013/01/tet-marks-relaxation-must-related-full.html?m=1

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. 6 மாதங்களில் 1,200 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: ஜனவரியில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
    அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள், மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
    டி.இ.டி., தேர்வில் தேர்வு பெற்ற, 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டும், முதலில் பணி நியமன உத்தரவுகள் வழங்குவதாக, திட்டமிடப்பட்டிருந்தது. பின், திடீரென, முதுகலை ஆசிரியர்களும், பட்டியலில் சேர்க்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற விழாவில், 2,895 பணியிடங்களில், 2,308 பேரை மட்டும் தேர்வு செய்து, பங்கேற்க செய்தனர். இவர்களுக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பணியிட ஒதுக்கீட்டிற்கான உத்தரவு வழங்கப்படவில்லை. இந்த உத்தரவு எப்போது வழங்கப்படும் என்ற தகவல் தெரியாமல், தேர்வு பெற்றவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
    தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களின், புகைப்படங்களுடன் கூடிய விவரங்களை, பள்ளிக் கல்வித் துறையிடம், இன்னும் டி.ஆர்.பி., ஒப்படைக்கவில்லை. இதனால், 2,308 பேரின், பணி நியமனம், எப்போதுநடக்கும் என, தெரியாத நிலை உள்ளது.
    கல்வித்துறை வட்டாரத்தினர் கூறுகையில்,"டி.ஆர்.பி.,யில் இருந்து, உரிய ஆவணங்கள் வந்ததும், பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற ஆசிரியர்களைப்போல், முதுகலை ஆசிரியர்களும், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவர்' என, தெரிவித்தனர். கடந்த, கல்வியாண்டுக்கான, காலி பணியிடங்களுக்குத் தான், தற்போது நியமனம் நடக்கிறது. 2,895 பணியிடங்களில், 2,308 பேர் நியமிக்கப்பட்டால், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களின் படிப்பில் பாதிப்பு ஏற்படாது. அடுத்த ஆண்டு, மே மாதத்திற்குள்,மேலும், 1,200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு, கல்வித் துறை தெரிவித்துள்ளது. எனவே, ஜனவரியில், புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தர்மபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய வட மாவட்டங்களில் தான்,அதிக காலி பணியிடங்கள் உள்ளன. எனவே, அனைத்து ஆசிரியர்களும், மேற்கண்ட மாவட்டங்களில், பணி நியமனம் செய்யப்படுவர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ReplyDelete
  6. குறை சொல்ல முடியாத தேர்வு: அமைச்சர் என்.ஆர்.சிவபதி
    தயவு செய்து உங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்!!!உங்களது கருத்துக்கள் யாருடைய மனதையும் புண்படுத்தாத படி தகுதியானதாக இருக்கட்டும் !!!
    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வு யாரும் விரல் நீட்டி குறை காட்ட முடியாத தேர்வு எனஅமைச்சர் என்.ஆர்.சிவபதி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
    சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆசிரியர்களுக்கான பணிநியமன உத்தரவுகளை வழங்கும் விழாவில் அவர் ஆற்றிய முன்னிலை உரை:
    அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஒன்றரை ஆண்டுகளுக்குள் 59 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்வர் அறிவித்தார். இப்போது, 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களை
    நியமித்துள்ளோம். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இந்தத் தேர்வு யாரும் விரல் நீட்டி சுட்டிக் காட்டி குறை சொல்ல முடியாதபடி நடைபெற்ற தேர்வாகும். ஒரே நேரத்தில் 20 ஆயிரத்து 920 பேருக்கு பணியிடங்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் நலன் காக்கும் நல்ல ஆட்சியில் அறப்பணியை மேற்கொள்ள நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றார் அமைச்சர் சிவபதி. மாவட்ட வாரிய அமைச்சர்கள்: தகுதித் தேர்வு மூலம், தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர்களுடைய மாவட்ட வாரியாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். முதல்வரின்தொகுதியான ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிவரும் மாவட்டமும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதியின் சொந்த மாவட்டமுமான திருச்சியைச் சேர்ந்தவர்களும் முதல் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சட்டை, பேண்ட் அணிந்திருந்தனர். ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் இருக்கைகளுக்குச் சென்று அந்த மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள்,முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் பணிநியமன உத்தரவுகளை வழங்கினர்.
    உத்தரவுகளைப் பெற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும், அவர்கள்பஸ்களில் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர். குறுகிய காலத்தில் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்தமைக்காக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு புதிய ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் நடைபெற உள்ள பட்டதாரி மற்றும் ஆரம்ப ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டைதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் முற்றிலும் புறக்கணித்து உள்ளதோடு, திட்டமிட்டே இடஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.
    இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இதுவரை மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாட வாரியான பணியிடங்களின் எண்ணிக்கையையும், மட்டுமே வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம், மொத்தப் பணியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி வகுப்புவாரியாக பணியிடங்களின் எண்ணிக்கையையும், பாடவாரியாகஇடஒதுக்கீட்டு பகிர்வின் படியான பணியிடங்களின் எண்ணிக்கையையும் திட்டமிட்டே வெளியிடாமல் மறைத்து வருகிறது.
    எந்த ஒரு அரசு பணி நியமனத்திலும் ‘இடஒதுக்கீடு’ என்பது உயிர்நாடியானதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வுகளின் மூலம் வெற்றி பெற்றவர்களில் உயர் மதிப்பெண்களின் அடிப்படையில் பொதுப்பிரிவு இடங்களில் எத்தனை பேர் இடம் பெறுகிறார்கள், வகுப்பு வாரியான இடஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள், பாடவாரியாகவும், வகுப்புவாரியாகவும் தற்போது நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மீதி காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் உடனடியாக வெளியிடவேண்டும்.
    தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் (NCTE) வழங்கி உள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியான, வகுப்புவாரியான தகுதி மதிப்பெண்களை தனித்தனியே வழங்காமல், NCTE விதிமுறைகளிலேயே இல்லாத மறுதகுதித் தேர்வை நடத்தியதுமிகப் பெரிய சட்ட மோசடியாகும்.
    அண்மையில் தான் முதுகலை ஆசிரியர் பணி நியமனப் பட்டியலின் இடஒதுக்கீட்டு குளறுபடிகளுக்காக தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
    தொடர்ந்து இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கையே தமிழக ஆசிரியர் வாரியத்தின் தலைவர் சுர்ஜித்சவுத்திரி மேற்கொண்டு வருகிறார். சமூக நீதி சட்டங்களுக்கு இந்தியத் துணைக்கண்டத்துக்கே வழிகாட்டியாக உள்ளது தமிழ்நாடு. எனவே முதல்வர் அவர்கள் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி சமூக நீதி காத்திட வேண்டுமென்றும், தவறும் பட்சத்தில் சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் அணிதிரண்டு இந்த சட்டவிரோத, சமூக விரோத போக்கைக் களைய களம் காண வேண்டும் என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

    ReplyDelete
  8. respected BTs,we have felt so much at the time of celebrating appointment grand function.am i correct?why did you felt inside your house?come outside to join together to make a case against this TET?first all BTs think did this TET govt follow all rules as per NCTE norms?at which govt exam conduct without announcement as per quota,subject wise of advertisement before conducting exam at till now?we are having rights to ask by court.if we are not co-operate together we loss our rights.

    ReplyDelete
  9. Doubts regarding PG PHO(Phy Handicapped) appointment:

    1.For filling 6 (1% out of 601 posts) PG PHO TAMIL (Phy handicapped) seats - why 63 PHO TAMIL candidates verified in C.V-2? Even if it is 1:2 only 12 PHO TAM should be verified.

    2.For filling 2 (1% out of 170 posts) PG PHO HISTORY(Phy handicapped) seats - why 25 PHO HISTORY candidates verified in C.V-2? Even if it is 1:2 only 4 PHO HISTORY should be verified.

    [Whether the govt have any idea of filling more PHO posts on humanitarian as filled in 2008-2009 for 72 Visually impaired candidates without following any communal reservation & no of posts by passing special G.O?]

    If anybody know about this - kindly add comment.

    [ Today Paper news is that-1200 New PG posts are to be announced for new PG Recruitment next month. So that more chances are to fill 900+1591=2491 PG posts as 2nd list from C.V-2.G.O passed for the those 900+1591 PG posts already.

    Present news is that-govt got ready to fill up the posts by C.V-2 candidates & also announce new posts recruitment. No clear information
    not yet received about the no of posts filled along with C.V-1 as 2nd list. But sources said that -ADEQUATE NO OF POSTS ARE ADDED & BOARD PREPARING FOR 2ND LIST TO PUBLISH IT IN QUICK & COUNSELLING DATE TO BE ANNOUNCED SOON WITHIN A WEEK.

    Some coaching centres are also getting ready to start the centres for PG recruitment. Both new recruitment & 2nd list from the verified candidates-both news are true. But we want to wait still for the genuine news.

    Heavy Chances to recruit G.O passed both 900 and 1591 posts or anyone of them. Or both appointed now & remaining posts for new recruitment by feb 2013. (Is there any writ going on regarding 1:2?)]

    Siranjeevi P
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete

  10. IMPORTANT POINT TO BE LISTENED BY P.G C.V-2 CANDIDATES:

    If the TRB board, finalizes PG Counselling as 1:2 - it overcomes from its own PG Notification – since TRB mentioned 'the number of candidates called for certificate verification will be slightly higher than the number of vacancies' in their PG Notification. In 1st C.V – For PG TAMIL board called 618 PG TAMIL candidates for verification as slightly higher than 1:1. But in 2nd C.V they called 1313 + 43 PHO Tamil candidates. This is higher than 1:2.

    As per Notification for Direct Recruitment of Assistant Professors in Government Engineering Colleges (2012) – the TRB board mentioned as – ‘The merit list of candidates short-listed for Certificate Verification (CV), in the ratio of 1:2 & the number of candidates called for Certificate Verification may be slightly higher than twice the number of vacancies. So, For selecting 304 candidates are called in the ratio of 1:2 for the appointing 152 posts. They even mentioned in C.V & Final result notification as 1:2. But is never followed as 1:1 (the number of candidates called for certificate verification in PG will be slightly higher than the number of vacancies ) & not even mentioned in PG 1st , 2nd C.V Notification & Final result Result Notification .

    Even this most important line is mentioned in PG WRIT judgement DATED 01.10.2012-PAGE-2. So that-the board want to fill all 6000 candidates as 2nd list in the ratio of 1:1 (the number of candidates called for certificate verification-6267 in PG will be slightly higher than the number of vacancies ) from C.V-2 list.

    For 2895 all work finished by board except withheld Botany & Tamil Medium. If they add 900(upgraded school post 100x9 posts )+ 1591(recently C.M announced) PG posts, more C.V-2 candidates can get the job.

    All the above information is only assumption & gathered news. But havemore chance to become true.


    Siranjeevi P
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. You are right
    justice delayed is justice denied

    ReplyDelete
  21. ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி
    தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம், 5,000 ஆசிரியர்கள் வரை மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பல மாதங்கள் வரை காலதாமதம் ஆனது.
    தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, முதுகலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    இதன் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில், 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களும், டி.ஆர்.பி., தேர்வின் மூலம்,3,000 முதுகலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும், டிச., 24ம் தேதி, பணியில் சேர உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் மேல், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர்.
    இவர்கள், 3,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய்வரை, மட்டுமே சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது, அரசு பணியில் சேர்ந்தவுடன், குறைந்தது, 18 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதால், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இவர்கள் தற்போது பணிபுரிந்து வரும், தனியார் பள்ளிகளில் இருந்து, விலகி அரசுப்பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
    இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை, ஆசிரியர்கள் பணியிடம் காலியாகியுள்ளது. அரசுப்பணி, சம்பளம் அதிகம் ஆகிய காரணங்களால், இவர்களை, தனியார் பள்ளியிலேயே தக்க வைப்பதற்கான முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை.அதிலும் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பாடம் எடுத்த, பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர்கள் பலர், கல்வியாண்டில் நடுவில், விலகி போவது,தனியார் பள்ளிக்கு பெரும் பின்னடைவையும், தேர்ச்சி விகிதம் குறையுமே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மாணவ, மாணவியர் மத்தியில், புது ஆசிரியர் மூலம் எப்படி தேர்வை சந்திப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
    இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரை, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். பள்ளிகளில் தொடர்ந்துபாடம் நடத்தி வருபவர்களால், இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. இதனாலேயே தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களாக உள்ளனர்.ஒட்டுமொத்தமாக அவர்கள் பணியிலிருந்து விலகுவதால், பல பள்ளிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மிக முக்கியம். அப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாதி கல்வியாண்டில், விலகுவதால், அந்த இடத்துக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிப்பதும் கடினம்.அதுமட்டுமின்றி, ஆசிரியருக்கும், மாணவருக்கும் இருந்த அதே தொடர்பு, மீண்டும் உருவாகவே மூன்று மாதம் ஆகிவிடும். அதற்குள் தேர்வு வந்து விடும் நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டில், பல பள்ளிகள் எதிர்பார்க்கும் தேர்ச்சி விகிதம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  22. Dear friends, the candidates who scored between 83-89 in tet can do one thing. Why don't we directly ask to our government regarding reservation relaxation as per NCTE(national council for teacher education) norms.
    Go to " http://cmcell.tn.gov.in"
    website.
    register yourself using your e-mail id. After registeration a conformation email with password will be sent to your e-mail id. Note it down.
    Then come to cmcell website again and select login after logged in select "lodge your Grievance" option and enter the necessary details and in the category option  select "employment".
    In content area(text box) describe our problem and necessary for reservation marks as per ncte norms. Note it is space limited where you can able to type only 2000 letters are allowed. I think so. Suppose if your are using desktop/laptop then type the content in a notepad/microsoft word than paste it in cmcell .....text box... Even from mobile also we can lodge our grievance on the online cm cell website (it depends on the mobile)
    Then select "submit" then you will get a option print your petition .... then .... you will get a petition number for your grievance in a confirmation mail to your e-mail id . note it. From then you can regularly check status of your compliant ....by login to cmcell website...
    we hope our honourable CM will do the best.
    *This cm cell online website was started by our present CM to enable the effective functioning of the Grievance system.
    Our CM has created excellent governance system in tamil nadu than any other state in India.
    Make use of it.

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. respect sir,if you dont mind,please avoid tanglish.try to make your comment in tamil or english only.we are ready to co-operate together with you for our rights upto 80 marks.please,inform your contact address

    ReplyDelete
  25. I would like give one suggestion to trb and govt. of Tamil Nadu.
    You may think that If the 5% reservation marks is given, that may create a confusion among candidates who had written both the TET papers (I&II). In that case
    TRB can say "if candidates who had written both the TET papers 1 and 2, in which the highest score he gets in can be taken into the considertion for teacher appoints". Because it shows that the candidates is strong in that particular paper in which he gets the highest score. So if he/she is appointed accordingly means the school students will get benefited.

    ReplyDelete
  26. hello friends
    tet cut off 55% aga kurippangala friends.
    second grade posting la vagancy innum irukka?
    ok next tet exam eppo?
    cut off 55% aga kuraithal job kku ethum vaaippu (paper-1) irukka?
    plz tell me friends
    my mail id is
    suguastro@gmail.com.

    ReplyDelete
  27. cv la niraya peru reject aagi irukkangale.! yenna kaaranam friends..?

    ReplyDelete
  28. தகுதி தேர்வில் இருந்து தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை
    அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 20 ஆயிரத்து 920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எம்.பில் முடித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.
    பயனற்ற புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வை காரணம் காட்டி, ஊதியம் வழங்க மறுப்பதை கைவிட வேண்டும். மேலும் அவர்களுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகள் அவகாசம் அளிக்க வேண் டும்.
    அரையாண்டு தேர்வு களை கடந்த ஆண்டுகளை போல் நடத்த வேண்டும். கடந்தஆகஸ்ட் மாதம் நடந்த கவுன்சலிங்கில் பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதாக கூறி, சில ஆசிரியர்கள் மாற்றப்பட்டனர். ஆனால் தற்போது அதே பணியிடங்களில் மீண்டும்ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    மாவட்ட இணை செயலாளர் லூயி ஜான்பிரிட்டோ, மாநில பொதுக் குழு உறுப்பினர்கள் கலைத்தங்கம், கண்ணன், ரிஷிகேசவன், பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    ReplyDelete
  29. 1200 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப கல்வித்துறை முடிவு

    முதுகலை ஆசிரியர் பணிக்கு காலியாக உள்ள 1200 இடங்கள் அடுத்த ஆண்டிற்குள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.இந்த பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டி.ஆர்.பி.,க்கு கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனவே ஜனவரியில் புதிய முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ReplyDelete
  30. Any past chief minister - in this present situation in TN-TET (still huge teacher vacant more than 20,000 even after the tet appoinments and huge fund - currrent year allocation for education 14,000 crores-as per education minister statement) ----would have definitly followed NCTE norms in giving 5% releaxation to BC, MBC, SC, ST candidates so that many of the family get quality life.
    --->This leaders would definitly give reservation marks 5% in TN-TET as per NCTE norms. Suppose If they are the Chief Minister of Tamil Nadu now...they are...
    Kamarajar(Congress)
    Arrienger Anna (Dmk)
    Kalienger Karunanethi(Dmk)
    Enn Nam Purachi Thalaivar MGR who started the ADMK would definitly give 5% reservation in this situtation....
    *We believe, appeal & pray to our present CM(amma) to give 5% reservation relaxation marks so that many of the family get quality life.

    ReplyDelete
  31. வேலை கிடைக்காத முதுகலை ஆசிரியர்கள் முற்றுகை : டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஓயவில்லை பரபரப்பு -அதெப்படி ஓயும் !!!!!!
    முதுகலை ஆசிரியர் தேர்வில் தேர்ச்சிபெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள், நேற்று, டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தினமும், 100க்கும் மேற்பட்டோர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுவதால், எப்போதும் ஒரே பரபரப்பாக காணப்படுகிறது. டி.இ.டி., தேர்வு, அதைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்
    தேர்வு இறுதிப் பட்டியலை, டி.ஆர்.பி.,வெளியிட்டதில் இருந்து, பல்வேறு பிரச்னைகளுடன், தினமும், 100 பேர், டி.ஆர்.பி., அலுவலகத்தில் குவிந்துவிடுகின்றனர். தேர்வில் தேர்ச்சி பெற்றும், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாதவர்கள், தேர்ச்சி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்பில், ஒருசில சான்றிதழ்களைகொடுக்காததால், இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள், தமிழ் வழியில் படித்து தேர்வு பெற்றும், அதற்கான இடஒதுக்கீட்டின் கீழ் வேலை கிடைக்காதவர்கள் என, பல்வேறு காரணங்களுடன், மனுக்கள் கையுமாக, பட்டதாரிகள் வருகின்றனர். இப்படி வருபவர்களை, முறையாக அழைத்து, அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற, டி.ஆர்.பி., மறுப்பதால், அலுவலக வாசலில் திரண்டு, கோஷம் போடுவதும், பட்டதாரிகளின் வாடிக்கையாக இருக்கிறது. முதுகலை ஆசிரியர், இறுதிபட்டியலில் இடம்பெறாத தேர்வர்கள் பலர், நேற்றும், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
    தேனியைச் சேர்ந்த அம்பிகா கூறுகையில்,""நான், வேதியியல் பட்டதாரி. தேர்வில், 110 மதிப்பெண்களை பெற்று, தேர்வு பெற்றேன். சான்றிதழ் சரிபார்ப்பின்போது, பி.எட்., சான்றிதழை அளிக்கவில்லை. தாமதமாக கிடைத்த சான்றிதழை, டி.ஆர்.பி., அலுவலகத்தில் ஒப்படைத்தும், இறுதி தேர்வு பட்டியலில், எனது பெயர் சேர்க்கப்படவில்லை. கேட்டால், அதிகாரிகள், எந்த பதிலும் அளிப்பதில்லை,'' என, புலம்பினார். இதேபோல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற அரசாணையை, டி.ஆர்.பி., அமல்படுத்தவில்லை என்றும், பலர் குற்றம் சாட்டினர். இந்த ஒதுக்கீட்டின் கீழ், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்திருந்தால், தமிழ் வழியில் படித்த பலருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும் எனவும், அவர்கள் தெரிவித்தனர்.
    இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:
    தமிழ் வழி படித்து, அதற்கான முன்னுரிமை பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை, ஆய்வு செய்து வருகிறோம். பள்ளிக்கல்வி முதல், குறிப்பிட்ட கல்விதகுதி வரை, அனைத்துப் படிப்புகளையும், தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். ஆனால், பலர், இடையில், ஏதாவது ஒரு கல்வியை, ஆங்கில வழியில் படித்தவர்களாக இருக்கின்றனர். எனவே, விண்ணப்பங்களை முழுமையாக ஆய்வு செய்தபின், இந்த ஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனியாக அறிவிப்பு செய்யப்படும். பணியிடங்கள் அதிகம் இருப்பதால், தகுதியான விண்ணப்பதாரர்கள், கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
    பட்டதாரிகள் வாழ்க்கையில் விளையாடும் டி.ஆர்.பி.,
    * எந்த பாடங்கள், எந்த படிப்பிற்கு நிகரானது என, பல்வேறு கால கட்டங்களில், உயர் கல்வித்துறை, அரசாணைகளை வெளியிட்டுள்ளது.
    * இந்த அரசாணைகள் குறித்து, டி.ஆர்.பி.,க்கே தெரியவில்லை. இதனால்,தேர்வில் தேர்வு பெற்ற பட்டதாரிகள் பலர், வேலை கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
    * உயர்கல்வித்துறையிடம் கேட்டு, இந்த அரசாணைகளை, இணையதளத்தில் வெளியிடவும், டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்கவில்லை.
    * தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு, அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து, முந்தைய அரசு, அரசாணை வெளியிட்டது. இந்த ஒதுக்கீட்டை, டி.ஆர்.பி., சரிவர கடைபிடிப்பது இல்லை என, தேர்வர்கள் மத்தியில் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
    * டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு, வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறதா என்ற விவரங்களை, நேற்றுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.
    * வேலைக்கு ஏற்ற கல்வித்தகுதியை மட்டும், தமிழ் வழியில் படித்திருந்தால் போதுமானது என, அரசாணையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஆனால், பள்ளிப்படிப்பு முதல், வேலைக்கு ஏற்ற கல்வி நிலை வரை, அனைத்து படிப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும் என கூறி, ஏராளமான பட்டதாரிகளுக்கு, வேலை வழங்க, டி.ஆர்.பி., மறுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    ReplyDelete
  32. பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்
    கோவை : பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து"சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.
    கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற,
    ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை,குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது.
    இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும்ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல்ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில்,"எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.
    ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும்காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும்மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.
    ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிக ளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
    மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியதுபோல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. nanbargale..!
    second grade teacher vagancy irukka? job tharuvangala!
    my mark is 88 paper-1
    my caste is mbc.
    naan elegible aaga vaaippu irukka? plz tell me plz tell me friends.

    ReplyDelete
  35. இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு, காலியாகும் அரசு பணியிடங்கள் - முறையான ஊழியர் நியமனம் நடக்குமா?
    தமிழக அரசுத்துறைகளில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், இந்த ஆண்டு மட்டும், 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில், 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இதனால் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கிறது.
    தமிழகத்தில் மொத்தம், 142 அரசுத் துறைகள் உள்ளன. கடந்த, 1996ம் ஆண்டு,ஜனவரி 1ம் தேதி எடுக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான கணக்கெடுப்பின்படி, 6 லட்சம் ஆசிரியர்கள், 3 லட்சம் அரசுஊழியர்கள், 1 லட்சம் சீருடை பணியாளர்கள் மற்றும் 2 லட்சம் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்கள் என, மொத்தம் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
    2001 முதல் 2005 வரை அதிகரிப்பு
    கடந்த, 2001ம் ஆண்டு முதல், 2005ம் ஆண்டு வரை, தமிழகத்தில் வேலை நியமன தடைச்சட்டம் அமலில் இருந்தது. இதனால், தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளாக, புதிய பணியாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதேசமயம், அரசுப்பணிகளில் இருந்து, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்தே வந்தது.
    இந்திய தலைமை கணக்காய்வு நிறுவனத்தின், தமிழக பிரிவில், பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்களது அலுவலகத்தின் சார்பில், ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கும் ஆணை எண் வழங்கப்படும். அதன்படி, தமிழகத்தில் கடந்த, 1993ம்ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை ஆண்டுதோறும், 25 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றனர்.
    2011ல் 40 ஆயிரம் பேர் ஓய்வு
    இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து, 2007ம் ஆண்டு முதல், 2011ம் ஆண்டு வரை, ஆண்டுதோறும், 40 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 2012-13ம் நிதியாண்டில் மட்டும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்என ஒட்டுமொத்தமாக, 1.27 லட்சம் பேர் ஓய்வு பெறுகின்றனர். இதில் 52 ஆயிரம் ஆசிரியர்களும் அடங்குவர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    கடந்த, 1991ம் ஆண்டுக்கு முன்பு வரை, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், அரசுத் துறைகளுக்கு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகைக்கு ஏற்ப, அரசின் நலத் திட்டங்கள், சரியான முறையில் சென்றடைய வேண்டுமானால், அதற்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் தேவை; அந்த ஊழியர்களின் பணிகள் என்னென்ன என்பதுஉள்ளிட்ட, பல விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதற்கேற்ப அரசுத்துறைகளில், புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், இந்த நடைமுறை, 1991ம் ஆண்டுக்கு பின்னர் பின்பற்றப்படுவதில்லை. ஒவ்வொரு துறைக்கும், தோராயமாகவே ஆட்களை நியமனம் செய்கின்றனர்.
    ஊழியர்களுக்கு பணி சுமை
    அவர்களின் பணிகளும் வரைமுறைப்படுத்தப்படுவது இல்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், பொதுமக்களுக்கு அலைச்சலும் ஏற்படுகிறது. மத்திய அரசின், 13 வது நிதி ஆணைக்குழு, தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழங்கியது.
    அதில், "தமிழகம் வளர்ந்த மாநிலமாக உள்ளது. எனவே மத்திய அரசின் தொகுப்பில் இருந்து, தமிழகத்துக்கு போதிய அளவில் நிதி வழங்க முடியாது. எனவே தங்களது சொந்த நிதியில் இருந்தே செலவினங்களை தமிழக அரசு கவனித்து கொள்ள வேண்டும்" என தெரிவித்திருந்தது. மேலும், "ஓய்வு பெறும் அரசு ஊழியர் பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் புதியதாக ஆட்களை நியமனம் செய்யலாம். இதனால் அரசுக்கும் செலவினங்கள் குறையும்" என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
    இது குறித்து, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் தலைமை நிலைய செயலர் சீனிவாசனிடம் கேட்டபோது, "நிதி நிலையை காரணம் காட்டி, அரசுப்பணியிடங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன. ஆசிரியர்பணியிடங்களை உடனுக்குடன் நிரப்புவதில் கவனம்செலுத்தும் அரசு,மற்ற அரசுத் துறைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
    ஓய்வுக்கு பிறகும் வேலை
    அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரும், மீண்டும் அவர்களுக்கே ஒப்பந்த அடிப்படையில், பணிகள் வழங்கப்படுகிறது. கருவூல கணக்கு துறையில் பணியாற்றி வந்த, 300 உதவி கருவூல அலுவலர்கள், சமீபத்தில் ஓய்வு பெற்றனர். ஆனால், இந்த பணியிடங்களுக்கு புதியதாக ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
    மாறாக, ஓய்வு பெற்றவர்களே ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் புள்ளியல் துறையில், சமீபத்தில் ஓய்வு பெற்ற, 120 பேருக்கு, ஒப்பந்த அடிப்படையில், மீண்டும் பணி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால்வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்து வைத்து, அரசு வேலைக்காக காத்திருக்கும், 75 லட்சம் பேரின் கனவு கேள்விக்குறியாகி உள்ளது.

    ReplyDelete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. Dear friend dmk govt seniority cv may month 2010 calfer pannanga engakuda panna 22000 jobku poitanga remaining cv posting podrathukulla admk govt vanthanga pending post above8000 irukum pothu engaluku jobkudukala Chennai la unna viratham poratam pala thadavai nadathi jj govt kandukave illa ungaluku 5% kudupanga nampikai iruka 100% nampiki illai court la case pottalum govtnanga talent teacher select 90 mark target kuduthu irukom arasu kolkai mudivunu pathil kudupanga pa

    ReplyDelete
  38. TET - தேர்ச்சி மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு குறித்தவாக்கெடுப்பு
    Days left to vote: 2
    நண்பர்களே , வாக்கெடுப்பு முடிய மீதம் இரண்டு நாட்களேஉள்ளன
    T - Trouble!
    E - Everything! = TET
    T - Trouble!
    - என்பதற்கு ஏற்ப முதலில்TET தேவையா? இல்லையா? என்பதில் துவங்கிய விவாதம் தேர்வு நடந்து Result வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு Weightage கணக்கிடப்பட்டுRank List வெளியிடப்பட்டு Online Counselling நடத்தப்பட்டு பணிநியமன ஆணை வழங்கி பணியில் சேரும் நிலைவந்த பிறகும் ஓயவில்லை என்பதே உண்மை.
    "TET Posting இல் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை " - என சமீபத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் " சமீபத்திய TET பணிநியமனங்கள் அனைத்தும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டவை " என அறிவித்து இருக்கிறது.
    இது குறித்து ஒரு அலசல்:
    1. TET - தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் Community வாரியாக குறைக்கப்பட வேண்டும் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
    2. வருங்கால தலைமுறையை உருவாக்கும் ஆசிரியர் பணிநியமனத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள தேவைஇல்லை என ஒரு சாரார் வாதிடுகின்றனர்.
    3. இதற்கிடையே அனைத்து பிரிவினரும் (All Community Candidates ) மிக கடினமாக படித்து வெற்றிபெற்று பணிநியமன ஆணை பெற்றுள்ள இந்த நேரத்தில் இது போன்ற வழக்குகளால், கிடைத்த அரசு பணிநிலைக்குமா என ஒரு சாரார் கவலைபடுகின்றனர்.
    4. இது போன்ற குழப்பமான நிலையில் இறுதியாக பாதிக்கப்படுவது என்னவோ மாணவர்கள் தான் என பெற்றோரும் கல்வியாளர்களும் வருத்தப்படுகின்றனர்.
    இது குறித்து நம் வலைத்தளத்தில் நம் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை அறிய நாம் ஒரு சிறிய வாக்கெடுப்பு நடத்த உள்ளோம்.
    ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இட ஒதுக்கீடு குறித்தும், தகுதி தேர்வு மதிப்பெண் குறைப்பது குறித்தும் நம் வலைதள இடது பக்கத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.
    ஆசிரியர்கள் அனைவரும் இதில் உங்கள் வாக்கினை பதிவு செய்யும்படியும், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்குமாறும் அன்புடன் வேண்டுகிறோம்.
    "ஒவ்வொரு சிறிய மழைத்துளியும் தான் பின்னாளில் கடல் ஆகிறது".
    "நீங்கள் இங்கு விதைக்கப்படும் விதை பின்னாளில் விருட்சம் ஆகலாம்".
    எனவே அனைவரும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும்.
    Please your vote www.padasalai.net

    ReplyDelete
  39. nanbargale idhuvarai trb yenthavidha pathilaiyum alikkavillai yenpathu varuththathiirkku uriya vizhayam than. anal trb pathil alikkuma yenpathe nambakathanmai atrathaga ullathe. high court 1 week kaala avakasam koduthu 8 naatkal agirathu anal yethuvum innum nadkkavillaiye. idhai pattri yethenum thagaval arinthal en mailkku anuppumaru kettukolkiren
    my mail id is
    suguastro@gmail.com

    ReplyDelete
  40. CHANCES IN PG FINAL SELECTION LIST

    What TRB going to do i final selection list?

    1.Whether they give online counselling shortly to 2308 posts attended CM function - leaving pending posts - Bot & Tam medium

    [Will Plan to appoint BOT + Tam medium + 2nd list + the absentees and those who have not produced Certificates in Jan 2013 as they mentioned in selection list notification as 'on humanitarian consideration give another chance to the absentees and those who have not produced Certificates in January 2013. Appropriate number of posts have been kept unfilled.']


    2.Filling exactly 2895 posts as per their notification dated 28.02.2012 by releasing pending posts of Bot & Tam medium (proving as they called candidates in 1:2 ratio overcoming their own PG Notification mentioned as CV will be slightly higher than no of vacancies)

    3.Adding more than 2000 or 3000 new adequate posts & gain good name by appointing more than 5500 or 6000 PG posts in bulk - since High court interrupted & directed Board & govt in all stages of PG appointment?!
    (since 900+1591=2491 vacancy posts are unfilled higher chances to fill vacancies with C.V 2 candidates. Guessing that they add some more posts to 600 with already G.O passed 2491. Totally 2895+2491+700=Approximately 6000 PG posts as 1:1 ratio-out of 6267 candidates if they follow their PG Notification norms as - CV done for - 'slightly higher than no of vacancies')

    4.Or push all the existing vacancies(900+1591+1200) to next New PG Recruitment in Jan 2013.

    Anything will happen. But some news confirms that 2nd list is getting prepared. But unable to knew it. We all - hope the best as we wait for last 6 months...

    Siranjeevi.P
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete
  41. மதுரை : ஆசிரியர் தகுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்தரவு மற்றும் மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.

    திருநெல்வேலி சாந்திநகர் அனுசுயா தாக்கல் செய்த மனு: நான் பி.எஸ்.சி.,இயற்பியல், பி.எட்.,படித்துள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி, 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதர பிற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்கலாம் என, தெரிவித்துள்ளது.
    இவை அசாம், ஆந்திரா, ஒடிசா, டில்லியில் அமலில் உள்ளன. தமிழகத்தில், பாரதியார் பல்கலை சலுகை வழங்குகிறது. சலுகை பற்றி ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில், குறிப்பிடவில்லை. 150 க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.ஜூன், 3 ல் நடந்த தகுதித் தேர்வில் 90 சதவீதம் பேர் தோல்வியடைந்தனர். மீண்டும் அக்.,14 ல் தேர்வு நடந்தது. அதில், 60 சதவீதமான 90 மதிப்பெண் கிடைக்கும் என, நம்பினேன். எனக்கு 76 மதிப்பெண் கிடைத்தது.
    "கீ ஆன்சர்', கேள்விகளை இணையதளத்தில் சரி பார்த்தேன். 87, 99 கேள்விகளுக்கு பதில் இல்லை. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாமல், 30 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தவறான மதிப்பீட்டால், மதிப்பெண் குறைந்துள்ளது.
    தகுதி மதிப்பெண் 60 சதவீதம் பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும். மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார்.
    பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை,3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    ReplyDelete
  42. டிச.27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலந் தழுவிய பேரணி
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வவேண்டும். 2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்குகட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்

    ReplyDelete
  43. மதுரை : ஆசிரியர் தகுதித்தேர்வில், 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற உத்தரவு மற்றும் மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை கோரிய வழக்கில், அரசுக்குநோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
    திருநெல்வேலி சாந்திநகர் அனுசுயா தாக்கல் செய்த மனு: நான் பி.எஸ்.சி.,இயற்பியல், பி.எட்.,படித்துள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி,60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும்; ஆதிதிராவிடர், பழங்குடியினர், இதரபிற்பட்டோர் , மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்களில் சலுகை வழங்கலாம் என, தெரிவித்துள்ளது.
    இவை அசாம், ஆந்திரா,ஒடிசா, டில்லியில் அமலில் உள்ளன. தமிழகத்தில், பாரதியார் பல்கலை சலுகை வழங்குகிறது.சலுகை பற்றி ஆசிரியர் தேர்வாணைய அறிவிப்பில், குறிப்பிடவில்லை. 150 க்கு 90 மதிப்பெண் பெற வேண்டும் என, குறிப்பிட்டுள்ளனர்.ஜூன், 3 ல் நடந்த தகுதித் தேர்வில் 90 சதவீதம் பேர் தோல்வியடைந்தனர். மீண்டும் அக்.,14 ல்தேர்வு நடந்தது. அதில், 60 சதவீதமான90 மதிப்பெண் கிடைக்கும் என, நம்பினேன். எனக்கு 76 மதிப்பெண் கிடைத்தது.
    "கீ ஆன்சர்', கேள்விகளை இணையதளத்தில் சரி பார்த்தேன். 87, 99 கேள்விகளுக்கு பதில் இல்லை. பாடத்திட்டத்திற்கு சம்பந்தமில்லாமல், 30 கேள்விகள் இடம்பெற்றிருந்தன. தவறான மதிப்பீட்டால், மதிப்பெண் குறைந்துள்ளது.
    தகுதி மதிப்பெண் 60 சதவீதம் பெற வேண்டும் என்ற உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும். மறு தேர்வு அடிப்படையில், நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும். எனது விடைத்தாளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும். ஒரு பணி இடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
    நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் தாளைமுத்தரசு ஆஜரானார்.
    பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆசிரியர்தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை,3 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

    ReplyDelete
  44. thank you murugavel sir,for your information about seniority.we are happy to hearing of Mr.Rathnakumar sir steps.at the same time please co-operate all BTs with Mr.Rathnakumar sir.sir has not taken as like these steps for himself only.so,integrate each and every district BTs.one hand dont make a sound.co-operate two hands only to make a sound.please understand and co-operate.thousands of cv BTs have appointed by seniority by some BTs co-operation and also important steps taken by Mr.Rathnakumar sir.so,including appointed BTs also please give up your support with ours.at the same time dont forgot to give up our support for our life.in future TRB cannot ready appoint BTs at just take 90 marks.because of we know very much TRB consider cut-off marks with weightage also.so,choose your life in your hand

    ReplyDelete
  45. WISH YOU HAPPY MERRY X MASS AND NEW YEAR

    ReplyDelete
  46. Decemberukulana pg posting poda chance eruga? Pg Case enum mudiyalaya?

    ReplyDelete
  47. We are slowly losing the faith/hope of a Democratic system... Because the social justice was denied by the rulers itself..... there is no uniformity in the implementation of laws and rules.... in one state in TET exam backward class people geting reservation [example: in Andra Pradesh they are giving 20% reservation in TET exam whereas in Tamil Nadu even for 5% it was denied...]
    * The backward class people who are all living in Andra Pradesh and Tamil Nadu - they are living in one country called India.... But the reservation is implemented differently .... How come this acceptable... Does it brings impartiality for the people who are all living in the same country called India????
    * Let us see what is happening in the coming days whether Justice given or Denied????

    ReplyDelete
  48. *Question: ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தலித், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்களில் சலுகை வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதே?
    *kalaignar reply: ஆந்திர மாநிலத்தில் 10 சதவீதமும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 சதவீதமும் தகுதி மதிப் பெண்களில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் வேறு சில மாநிலங்களிலும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் தகுதி மதிப்பெண்களில் ஆதி திராவிடர்கள், பழங்குடியினர் மற்றும் மா ற்றுத் திறனாளிகளுக்கு இந்தச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு இதுவரை எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.இவ்வாறு சலுகை அளிக்கப்படாமலேயே 12&7&2012, 14&10&2012 தேதிகளில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆதி திராவிடர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் தமிழக அரசு இந்தச் சலுகையை அளித்திருந்தால், அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22,000 ஆசிரியர்களில் இந்தப் பிரிவின் சார்பில் குறைந்தபட்சம் 7 ஆயிரம் ஆசிரியர்களாவது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் தமிழக அரசு இந்த சலுகையை ஏன் இன்னும் வழங்கவில் லை என்று தெரியவில்லை. இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் பணி நியமனம், இந்த வழக்கில் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றும் அறிவித்திருக்கிறார்கள். தமிழக அரசில் எப்படிப்பட்ட குளறுபடிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன என்பதற்கு இதுவும் ஓர் சான்றாகும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

    *Read this above news in today (23.12.12) DINAKARAN & DINAMANI newspaper.Don't forgot.
    --->Now our Ex.Chief Minister Kalaignar கருணாநிதி (who is a CM of tamil nadu for 6 times, Since from 1969 onwards) has raised his voice against the Injustice happened to Backwardclass people in TamilNadu in TN-TET exams....subsquently in the govt. teacher appointments.
    * We expect our government will definitly give 5% reservation relaxation marks in TET as per NCTE norms to OBC/SC/ST/PH candidates....
    *This injustice to backward class people will definitly reflect in the coming MP elections(2014) and MLA elections(2016) because it is democratic country...Backward class people also have the right to vote.
    *We believe our present government will do good for us.

    ReplyDelete
  49. PG Counselling Eppothu sir? Pls Answer Sir?

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
  51. When they will conduct pg councilling???? Plz ans me

    ReplyDelete
  52. Dear PG Candidates,

    No confirm news not received about - PG Bot & Tam pending candidates selection list + Additional 2nd list posts with the 1st list + PG TRB counseling date.

    Only Paper news - spread wrong info abt PG online counseling date in 1 or 2 days last week. It's our fate to wait for some more time?! What’s going on?????

    1.Selected PG candidates from C.V 1 & C.V 2 received temporary appointment order in CM function Dec 13th waiting for Online counseling date & appointment(as informed within 10 days).

    2.Those who r missed in the selection list with nearest cut-off marks (from the border line of C.V 1) - feels more painfully that - why TRB called C.V 2 & give chances for the candidates with weightage marks & made them to enter into the selection list? . And waits for the extension of posts.

    [As per PG notification – Board mentioned as - 'Weightage marks will be given after CV for the shortlisted candidates.' Shortlisted candidates means only those who comes only within the cut-off. Ex: For 601 PG TAM posts they called 618 in CV 1. If they given weightage to that 618 CV 1 candidates - only 17 candidates those who are with lower marks after adding weightage marks will lose their selection. Only competition will be aroused between the candidates in C.V-1 those who scored higher marks in theory(150 marks). But TRB called 1313 candidates for PG TAM in CV 2. Candidates even with lower cut off + higher weightage marks pushed down the CV 1 merit selected candidates at the border. Board crossed its own points in notification as they mentioned as - ‘Weightage marks will be given after CV for the shortlisted candidates’ & ‘the number of candidates called for CV may be slightly higher than the number of vacancies’. For PG TAM – 618 called for C.V 1. It is slightly higher than the number of vacancies . But in C.V 2 – 1313 + 43 PH ORTHO + more than 14 Visually Impaired called.

    Only in the recent Polytechnic Lecturers & Engineering Professors recruitment Notification – Board mentioned as – ‘the number of candidates called for CV may be slightly higher than TWICE (two times) the number of vacancies.’ & ‘the merit list of candidates short-listed for Certificate Verification (CV), in the ratio of 1:2’. But in PG TRB it is mentioned only as ‘the number of candidates called for CV may be slightly higher than the number of vacancies’. Clearly TRB overcame its own Notification]

    3. C.V 2 candidates those who r not selected but present nearby the selected cut-off - waiting for the post extension. Idea of extending PG posts are still not yet announced by TRB or Edn dept or Govt even after 2 months from CV 2 date. Verifying 1313 in PG TAM for 601 PG TAM posts is clearly makes big question in all minds of C.V 2 candidates that – board having any idea of posts extension?!

    Board now want to announce above 5500 to 6000 PG posts totally (6267 verified in CV 2) as per their notification (‘the number of candidates called for CV may be slightly higher than the number of vacancies’). Even if the 1200th candidate in PG TAM file a writ – they overcame their notification – board should answer for them. But no single news about post extension came from board/DSE/Govt still now. Negative news came as 1200 vacancies are called new by Jan 2013. But at present 10,000 PG vacancies are available.

    4. 63 PHO TAMIL candidates verified in C.V-2 waiting for the answers - For filling 6 (1% out of 601 posts) PG PHO (Phy handicapped) seats why 63 PHO called? Even the last PHO candidate (63rd) waits with lot of hope from TRB.

    5. TAMIL medium candidates problems are not known clearly. Court judgement says only PG & B.Ed taken in consideration for TAM MEDIUM PRIORITY. If no TAM medium candidate available - it is expected to be filled by - non-Tam medium candidates.
    All above 5 category of PG tchrs are waiting for +ve news from TRB soon.

    Siranjeevi P,
    siranjeevi1983@gmail.com

    ReplyDelete
  53. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பணிநியமனம் வழங்கப்படாத 5 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 5 பணியிடங்களை தற்காலிகமாக ஒதுக்கி அரசிடம் விளக்கம் கோரி உயர்நீதி மன்றம் உத்தரவு
    கடந்த மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம் (Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை.
    இவர்கள் ஏற்கனவே பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒருஇளங்கலை பட்டத்தை முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும் இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில் இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது, இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது, "உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
    இந்நிலையில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள்ஒன்றிணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று இவ்வழக்கின் விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர் தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL" இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.
    இதையடுத்து வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும், இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு நடைபெற்றால் இவர்களை பங்கேற்க அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள் அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.

    ReplyDelete
  54. *Intha TET Reservation injustuce'a enga vazhnal fulla markka mudayathu. ( Andra govt etha situationla 20% kutthu irukanga Ana Tamil Nadula 5% than NCTE rule padi kakkrom...)
    * 5% reservation marks to OBC/SC/ST/PH kutuikkarathunala....remaining BT vacancy 12,000 fill pannalam. Ethnala pala aged and experienced teachers will get govt teacher job...
    *Suppose if more candidates comes in 5%(83-89) then according to weightage system govt can give the positing... for the rest of candidates they can atleast issue TET pass certificate and give them ranking number as per their weightage and communal turn... so that they can get preference in the next govt. teacher posting... with that atleast those candidates live hopefully...
    *Or the govt want to fill the remaning vacancy by the candidates who are stuying B.Ed/ D.Ted currently in 2012-13 by conducting another tet in 2013.
    (Some body may object this point .... But we completed B.Ed/D.Ted before 5-15 years back .....Why Tet is not introduced at that time when we have completed B.Ed/D.Ted in 1993,94,95,....to 2010...)
    *Already in the most if the govt. exams the maximum age limit was set to 30-32. Even in the TNPSC-VAO exam four months ago.... maximum age limit was set to 40 years only.... Then where will the aged people who is looking govt. job will go??? when they will get quality life???
    *In most of the private schools where the teacher who works for 5-15 years still getting salary of below Rs.8,000/- but his/her students who studied under them are now passed out D.ted and B.Ed in 2011,2012 batches and cleared Tet and got posting now .... we appreciate them... we are not degrading them... but compare the life situtation of the person who is below 25 & bachelor with the person above 25 to 58 & family person.
    * In the second said person can't easily leftout his/her present job and go for TET coaching or spend full day for tet preparation .... he/she has to concerate his routing life(work & family life) as well as for the tet preparation......In this point you may ask a question that they are not quality teachers... but TET 150 questions does not assesed and finded out quality teacher.
    *Apart from that...lot of TET questions were asked from higher secondary level...in paper 2.... the problem is that higher secondary(+11,+12) books for History and Economics is not available in any bookstore as well as this Group(history, economics) is not there in any private/matriculation schools....then how come a working teacher(Tamil & English subject teacher) can attempt those higher secondary level other subject questions...
    *As success has many reasons...
    failures also have valid reason... our govt has to think on this.... And understand pains of the candidates who scored 89,88,87 to 83.
    *We kindly request our Tamil Nadu govt to 5% reservation relaxation marks to OBC/SC/ST/PH candidates.

    ReplyDelete
  55. What is the current status of PG TRB whether case is going on or to be final stage. Pls answer me.


    ReplyDelete
  56. தகுதியானவர்கள் மட்டுமே முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம்

    First Published : 27 December 2012 08:22 AM IST

    பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக தகுதியானவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 21 ஆயிரம் பேரில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறாதது கண்டறியப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 2,300 பேரின் தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறைக்கு வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதைத் தொடர்ந்து அவர்களுக்கு ஓரிரு நாள்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
    சுமார் 21 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமனத்தில் வெறும் 6 பேர் மட்டுமே உரிய தகுதிகள் பெறவில்லைஎன்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சரிபார்ப்பில் தெரியவந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
    ஆசிரியர் தகுதித் தேர்வு, போட்டித் தேர்வு ஆகியவற்றின் மூலம் 18 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களும், 2,300 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
    பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் ஆன்-லைன் கலந்தாய்வில் தங்களுக்கான பணியிடங்களைத் தேர்வு செய்தனர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்குபணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட பிறகு பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
    விழாவுக்குப் பிறகு தேர்வுசெய்யப்பட்டவர்களின் தகுதிகள் மீண்டும் ஒருமுறை சரிபார்க்கப்பட்டன. பலர் உரிய தகுதிகளைப் பெறவில்லை என்றுசெய்திகள் வந்தன.
    ஆனால், சரிபார்ப்பின் முடிவில் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் மூன்று பேரும் உரிய தகுதிகளைப் பெறாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே பணி நியமனம் பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேருவதில் எந்தவிதத் தடையும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
    சான்றிதழ்கள் சரிபார்ப்பு: பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆன்-லைன் மூலமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்குமுன்னதாக அனைவரின் சான்றிதழ்கள், தகுதிகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டன. இதில் ஓரிருவர் உரிய தகுதிகளுடன் இல்லை.
    அவர்கள் உடனடியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பல்வேறு காரணங்களால் சுமார் 70 பேர் பணியில் சேரவில்லை.
    8,556 பேரும் தகுதியானவர்கள்: பணி நியமனம் பெற்ற 8,556 பேரும் உரிய தகுதிகளுடனே பணியில் சேர்ந்துள்ளனர். அதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்துவிட்டனர். இவர்கள் அனைவரும் இந்த மாதத்துக்குரிய சம்பளத்தைப் பெறலாம். அதில் எந்தவிதப் பிரச்னையும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    மிகப்பெரிய எண்ணிக்கையில் தகுதியில்லாதவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறுவது தவறானது என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
    முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: நீதிமன்ற வழக்குகள் காரணமாக சற்றுத் தாமதமாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டன. இறுதிநேரத்தில் சற்றுஅவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது.
    2,308 பேரில் மூன்று பேர் மட்டுமே தகுதிகளுடன் இல்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    எந்தவொரு மிகப்பெரிய பணி நியமனத்திலும் சிறிய பிரச்னைகள் இருப்பது இயல்புதான். ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
    நீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ள தாவரவியல் பிரிவுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும். தமிழ் வழி முன்னுரிமை கோருவோர் தவறான சான்றிதழ்களை அளித்துள்ளதால், அந்தப் பிரிவினருக்கு மட்டும் மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ReplyDelete
  57. AS PER DINAMANI NEWS PG COUNCELLING WILL BE 29.12.2012(SATURDAY). CEO OFFICE STAFF ALSO TELLING MAY BE BEFORE SCHOOL OPENING YOUR (PG) COUNCELLING WILL BE OVER BEFORE 2ND JANUARY. ITS NOT CONFIRM NEWS.

    ReplyDelete
  58. ஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?
    புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
    சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.
    தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
    அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ReplyDelete
  59. TRB PG COUNCELLING 99% 31.12.2012 (MONDAY). THIS NEWS COMING FROM CEO OFFICE STAFF.NOT OFFICAL BUT PERSONAL. BE READY ALL DEAR PG TEACHERS

    ReplyDelete
  60. what about pg cv2 teachers ... any chance for recruit ?

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. "தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட , தாழ்த்தப்பட்டவர்க ளுக்கு தகுதி தேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டும"

    -நக்கீரன் செய்தி

    ஆசிரியர் தகுதித் தேர்வு இந்தியாவில் ஆந்திரபிரதேசம் (APTET), அசாம் (ATET), பீகார் (BTET), ஒடிசா (OTET), ஹிமாச்சல் பிரதேசம் (HPTET),ராஜஸ்தான் (RTET),உத்தரபிரதேசம் (UPTET) என இத்தனை மாநிலங்களில் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப் படுகின்றன. ஆனால் 
    தமிழகத்தில் அப்படியொரு இட ஒதுக்கீட்டையே மறுத்து தகுதிதேர்வும் ஆசிரியர் நியமனங்களும் நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகளும் சமீபத்தில் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ளன.குறிப்பாக எ.சதீஷ் எதிர் தமிழ்நாடு ஆசிரியர் வாரியம் (W.P.No.31706/ 2012) மற்றும் சென்னையை சேர்ந்த ராஜீவ்காந்தி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு (W.P.No. 32283/ 2012) ராஜீவ்காந்தி எதிர் கூடுதல் செயலர், பள்ளி கல்வித்துறை மற்றும் தலைவர், ஆசிரியர் தேர்வு வாரியம். மேலும் பல வழக்குகள் தகுதி தேர்வு சம்மந்தமாக விசாரணையில் உள்ளன. அந்த பொதுநல மனுவில், ஆந்திர மாநிலத்தை போன்று தமிழகத்திலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு தகுதிதேர்வில் இடஒதுக்கீடு அளிக்கவேண்டுமென கோரி இருந்தார். இந்த மனுவை பரிசீலனை செய்து அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை கண்டித்தும் இடஒதுக்கீடு அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டு மென கலைஞர் மு. கருணாநிதி அறிக்கைவெளியிட்டார். அதேபோல திராவிடர் விடுதலை கழகம் தலைவர் கொளத்தூர்மணி தகுதி தேர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டார். மேலும் இதற்காக தேவைப்பட்டால் போராட்டம் நடத்துவோம் என தொலைபேசியில் நம்மிடம் தெரிவித்தார். இறுதியாக, போட்டித்தேர்வுகள், தகுதி தேர்வு நடத்தும்போது ஐந்து நடைமுறைகளை கட்டாயம் பின் பற்றப்பட வேண்டும் என அழுத்தம் தருவோம். 1. தேர்வு நடத்திமுடித்தவுடன் சரியான (ஒரே) விடைகளை வெளி யிடப்படவேண்டும். 2. பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் களின் அதாவதுவெற்றிப் பெற்றவர்களின் இறுதிப் பட்டியல் எவ்வித குளறுபடியும் இல்லாமல் இடஒதுக்கீடு அடிப்படையில் பதிவு எண், பெயர், சாதியை குறிப்பிட்டு தெளிவாக வெளியிட வேண்டும். 3. இறுதி பட்டியல் வெளியிட்டவுடன் எவ்வித மாறுதலையே மறுப்பட்டியலோ கட்டாயம் வெளியிடக்கூடாது. 4. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்கள் குறித்த விவரத்தை சாதி வாரியாக தெளிவாக வெளியிட வேண்டும்.5. பணி நியமனம் முடிந்த பின்னர் ஏற்படும் காலிலியிடங்களை எந்தெந்த சாதியினர் பணி நியமனம் செய்யப்படவில்லையோ மீண்டும் அந்த சாதியினரை கொண்டே நியமனம் செய்யப்படவேண்டும். இவைகளை செய்யவில்லை என்றால் தேர்வில் வெளிப்படையான தன்மைஇல்லை என்று அர்த்தமாகும். 

    "TET Marks Relaxation Must" - Related Full Collection of Documents

    visit to this link ------>

    http://www.padasalai.net/2013/01/tet-marks-relaxation-must-related-full.html?m=1

    ReplyDelete

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||

Categories

@ BREAKING NEWS (48) @ FLASH NEWS (3325) @ SITE MAP (1) @ செய்தி துளிகள் (4) 1.WHAT'S NEW (50) ACADEMIC CIRCULAR (1) ADMISSION UPDATES (110) AHM RELATED (1) ANDROID APP (5) ANSWER KEY (19) ARTICLES (168) ASSEMBLY UPDATES (6) AUDIO BOOK (1) AWARD UPDATES (7) BANK JOB UPDATES (25) BOOK FAIR (3) BOOKS CLASS 1 NEW (1) BOOKS CLASS 10 NEW (1) BOOKS CLASS 11 NEW (1) BOOKS CLASS 12 NEW (1) BOOKS CLASS 2 NEW (1) BOOKS CLASS 3 NEW (1) BOOKS CLASS 4 NEW (1) BOOKS CLASS 5 NEW (1) BOOKS CLASS 6 NEW (1) BOOKS CLASS 7 NEW (1) BOOKS CLASS 8 NEW (1) BOOKS CLASS 9 NEW (1) BOOKS D.ELE.ED 1 (1) BOOKS D.ELE.ED 2 (1) BOOKS EDUCATION (2) BOOKS ENGINEERING (2) BOOKS NCERT (13) BOOKS POLYTECHNIC (1) CALENDAR FOR SCHOOLS (5) CAREER GUIDANCE (1) CBSE UPDATES (2) CCE REGISTER (1) CEO TRANSFER-PROMOTION (5) CEO LIST (1) CLASS 1 STUDY MATERIALS (1) CLASS 10 STUDY MATERIALS (1) CLASS 11 BIOLOGY MATERIALS (3) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -EM (1) CLASS 11 BIOLOGY ZOOLOGY OT -TM (1) CLASS 11 STUDY MATERIALS (1) CLASS 11 ZOOLOGY OT -EM (1) CLASS 11 ZOOLOGY OT -TM (1) CLASS 11 ZOOLOGY OT -TM_2 (13) CLASS 12 BIO BOT - BIO ZOO ONLINE TEST WITH AUDIO (1) CLASS 12 BIOLOGY BOTANY OT EM (1) CLASS 12 BIOLOGY BOTANY OT TM (2) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT EM (1) CLASS 12 BIOLOGY ZOOLOGY OT TM (1) CLASS 12 STUDY MATERIALS (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 EM (4) CLASS 12 ZOOLOGY 2-3-5 TM (4) CLASS 12 ZOOLOGY OT EM (1) CLASS 12 ZOOLOGY OT TM (1) CLASS 12 ZOOLOGY TM (1) CLASS 2 STUDY MATERIALS (1) CLASS 3 STUDY MATERIALS (1) CLASS 4 STUDY MATERIALS (1) CLASS 5 STUDY MATERIALS (1) CLASS 6 STUDY MATERIALS (1) CLASS 7 STUDY MATERIALS (1) CLASS 8 STUDY MATERIALS (1) CLASS 9 STUDY MATERIALS (1) CLASS_11_BIO_ZOO_OT_TM_2 (12) CLASS_11_OT (4) CLASS_12_BIO_BOT_OT_EM_2 (10) CLASS_12_BIO_BOT_OT_TM_2 (10) CLASS_12_BIO_ZOO_OT_TEM_2 (12) CLASS_12_OT (6) CLASS_12_ZOO_OT_TEM_2 (13) CLASS_12_ZOOLOGY_TM (3) COACHING CENTRES (6) COLLEGE UPDATES (22) COMPUTER TEACHERS UPDATES (10) CoSE (11) COUNSELLING UPDATES (23) COURT UPDATES (26) CPS (3) CPS UPDATES (12) CRC (1) CSE (2) CSE_2 (55) CTET (2) D.A G.O (4) D.A NEWS (7) DEE (5) DEO EXAM UPDATES (18) DEO TRANSFER-PROMOTION (2) DGE (20) DRESS_CODE (1) DSE (26) E-BOOKS DOWNLOAD (1) EDU UPDATES (1464) EDUCATION NEWS (1) ELECTION (2) EMAIL ME (1) EMIS (1) EMPLOYMENT UPDATES (444) EQUIVALENCE OF DEGREE (2) EXAM ESLC (7) EXAM NOTIFICATION (16) EXAM UPDATES (73) EXCEL TEMPLATE (3) FIND TEACHER POST (10) FONTS -TAMIL (1) FORMS (5) G.K NEWS (17) G.O DOWNLOAD (19) G.O UPDATES (93) G.O_NO_001-100_2 (1) G.O_NO_101-200_2 (2) G.O_NO_201-300_2 (1) G.O_NO_601-700_2 (1) GPF (2) GUIDE - ARIVUKKADAL BOOKS (1) GUIDE - BRILLIANT GUIDE (1) GUIDE - DEIVA GUIDE (1) GUIDE - DOLPHIN GUIDE (1) GUIDE - DON GUIDE (1) GUIDE - FULL MARKS GUIDE (1) GUIDE - GEM GUIDE (1) GUIDE - JAMES GUIDE (1) GUIDE - JESVIN GUIDE (1) GUIDE - KONAR GUIDE (1) GUIDE - LOYOLA GUIDE (1) GUIDE - MERCY GUIDE (1) GUIDE - PENGUIN GUIDE (1) GUIDE - PREMIER GUIDE (1) GUIDE - SARAS GUIDE (1) GUIDE - SELECTION GUIDE (1) GUIDE - SURA GUIDE (1) GUIDE - SURYA GUIDE (1) GUIDE - WAY TO SUCCESS GUIDE (1) HM GUIDE (1) HM TRANSFER-PROMOTION (1) HOLIDAY G.O (4) HOLIDAY UPDATES (17) IFHRMS (2) INCOME TAX UPDATES (2) IT FORM (24) JACTO GEO (2) JD TRANSFER-PROMOTION (3) KALVI TV_2 (2) KALVI_VELAIVAIPPU (43) KALVISOLAI - CONTACT US (1) KALVISOLAI - TODAY'S HEAD LINES (2) KAVITHAIKAL (1) LAB ASST (1) LEAVE (1) LOAN (1) maternity leave (1) MRB UPDATES (5) NCERT NEWS (1) NEET EXAM UPDATES (67) NEET NOTIFICATIONS (1) NEET STUDY MATERIALS (9) NET-SET UPDATES (25) NET-SET NOTIFICATION (11) NEW INDIA SAMACHAR (1) NEWS - INDIA (9) NEWS LIVE (1) NHIS (1) ONE DAY SALARY (1) ONLINE TEST (53) PART TIME TEACHERS UPDATES (4) PAY COM UPDATES (27) PAY ORDERS (27) PAY SLIP DOWNLOAD (1) PENSION NEWS (2) PG SENIORITY LIST (1) POLICE RECRUITMENT UPDATES (9) POLICE S.I NOTIFICATIONS (2) POLYTECHNIC LECTURER UPDATES (2) POSTS TO REMEMBER (55) POSTS-TO-REMEMBER (1) PRAYER (66) PROMOTION PANEL (2) PROMOTION PANEL_2 (88) PROMOTION UPDATES (16) PROMOTION-COUNSELLING (1) PROMOTION-COUNSELLING_2 (133) PTA QUESTION BANK (1) PTA TEACHERS (2) QUARTERLY EXAM (1) REGULARISATION ORDERS (22) RESULT - LINK (2) RESULT UPDATES (87) RH DOWNLOAD (8) RRB (1) RTE UPDATES (3) SCHOLARSHIP UPDATES (3) SCHOOL UPDATES (13) SHARE NOW (1) SMC (1) SSC UPDATES (1) STORY (8) STUDY ACCOUNTANCY (1) STUDY AGRI SCIENCE (1) STUDY ARABIC (1) STUDY AUDITING (1) STUDY AUTOMOBILE (1) STUDY BIO CHEMISTRY (1) STUDY BOTANY-BIOLOGY (3) STUDY BUSINESS MATHEMATICS (1) STUDY CHEMISTRY (1) STUDY CIVIL ENGINEERING (1) STUDY COMMERCE (1) STUDY COMPUTER (2) STUDY ECONOMICS (1) STUDY EDUCATION (2) STUDY ELECTRICAL ENGINEERING (1) STUDY ELECTRONIC ENGINEERING (1) STUDY ENGINEERING (2) STUDY ENGLISH (1) STUDY ETHICS (1) STUDY FOOD SERVICE MANAGEMENT (1) STUDY GENERAL MACHINIST (1) STUDY GENERAL STUDIES (1) STUDY GEOGRAPHY (1) STUDY GEOLOGY (1) STUDY HINDU RELIGION (1) STUDY HISTORY (1) STUDY HOME SCIENCE (1) STUDY KANNADA (1) STUDY LAW (1) STUDY LIBRARY (1) STUDY MALAYALAM (1) STUDY MATERIALS (5) STUDY MATHEMATICS (1) STUDY MECHANICAL ENGINEERING (1) STUDY MEDICINE (1) STUDY MICROBIOLOGY (1) STUDY NURSING (1) STUDY NUTRITION (1) STUDY OFFICE MANAGEMENT (1) STUDY PHYSICAL EDUCATION (1) STUDY PHYSICS (1) STUDY POLITICAL SCIENCE (1) STUDY POLYTECHNIC (1) STUDY PSYCHOLOGY (1) STUDY SANSKRIT (1) STUDY SCIENCE (1) STUDY SOCIAL SCIENCE (1) STUDY SOCIOLOGY (1) STUDY STATISTICS (1) STUDY STENOGRAPHY (1) STUDY TAMIL (1) STUDY TELUGU (1) STUDY TEXTILES (1) STUDY TYPE WRITING (1) STUDY URDU (1) STUDY ZOOLOGY-BIOLOGY (3) STUDY_MATERIALS_2 (1) SYLLABUS DOWNLOAD (6) TALENT EXAM MATERIALS (1) TALENT EXAM UPDATES (3) TAMIL NADU UPDATES (80) TANCET EXAM UPDATES (3) TEACHERS TRANSFER COUNSELLING UPDATES (34) TECHNICAL EXAM UPDATES (2) TET (1) TET OFFICIAL ANSWER KEY (6) TET STUDY MATERIALS (16) TET UPDATES (54) TEXT BOOKS DOWNLOAD (16) TEXT BOOKS NEWS (6) TEXT MATERIALS (1) TIME TABLE EXAM (34) TN (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 1 (2) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 2 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 3 (1) TN GOVT DSE G.O DOWNLOAD | பள்ளிக்கல்வி அரசாணை 4 (1) TN PROMOTION - TRANSFER - COUSELLING (1) TN TEXT BOOKS ONLINE (1) TNCMTSE (3) TNFUSRC MATERIALS (1) TNPSC ANNUAL PLANNER (9) TNPSC ANSWER KEY (1) TNPSC BULLETIN (1) TNPSC CURRENT AFFAIRS (19) TNPSC DEPARTMENTAL EXAM (18) TNPSC DEPARTMENTAL EXAM ONLINE TEST (61) TNPSC NOTIFICATION (51) TNPSC PRESS RELEASE (3) TNPSC STUDY MATERIALS (35) TNPSC SYLLABUS (1) TNPSC UPDATES (182) TNUSRB MATERIALS (2) TOP-POSTS (13) TRANSFER UPDATES (16) TRB ANNUAL PLANNER (6) TRB ANSWER KEY (3) TRB BEO (2) TRB NOTIFICATIONS (29) TRB RESULT (5) TRB SPECIAL TEACHERS (1) TRB STUDY MATERIALS (3) TRB UPDATES (144) TRUST EXAM (3) TTSE (3) UGC NEWS (4) VIDEO (6) VIDEOS FOR TNPSC (1) WEBSITE (1) What's New. (1) WHATSAPP UPLOAD 2023 (2)

Get Latest Updates: Follow Us On WhatsApp

Popular Posts

Blog Archive

Recent Posts

Featured Post

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு.

PTA QUESTION BANK BOOK DOWNLOAD | 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் தொகுப்பு மற்றும் தீர்வுப் புத்தகம் வெளியீடு. NEED ...

Followers

Pages