× JOB !!! இன்றைய கல்வி வேலைவாய்ப்பு தகவல்கள் : CLICK HERE
× PRAYER !!! இன்றைய பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் : CLICK HERE
× TNCMTSE !!! தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் : CLICK HERE
× REGULARISATION ORDER !!! பொதுவான பணிவரன்முறை ஆணைகள் : CLICK HERE

உதவி பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு -அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

உதவி பேராசிரியர்களை நிரப் புவதற்கான, டிஆர்பி தேர்விற்கான அறிவிப்பு இன்னும் 10 நாட்களில் வரும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பொன் முடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசு கல்லூரிகளில் பணியாற்றும் உதவி பேரா சிரியர்களின் பணியை வரைமுறை படுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து இருந்த னர். கடந்த 2012ம் ஆண்டு பணிக்கு நியமிக்கப்பட்ட 955 துணை பேராசிரியர் கள் பணி நிரந்தரம் செய் யப்படுவார்கள் என அதி முக அறிவித்து இருந்தது. ஆனால், அவர்கள் அதை செய்யாத காரணத்தால், கிட்டத்தட்ட 9 ஆண்டு களுக்குப் பிறகு தற்போது பணி நிரந்தரம் செய்யப் பட்டுள்ளனர்.

பல்கலைக்கழகங் களுக்கு கீழ் செயல்படுகின்ற 41 கல்லூரிகளின் 152 கோடி செலவை அரசே ஏற்கும் என்று முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை . தற்போது அந்த கல்லூரி கள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக் கப்பட்டுள் ளது. உதவி பேராசிரியர்களை நிரப்புவ தற்கான டிஆர்பிதேர்விற் கான அறிவிப்பு இன்னும் 10 நாளில் வரும். அதில் 4 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக் கப்படுவார்கள், பாலிடெக்னிக் கல் லூரிகளுக்கு தேர்வு செய் யப்பட்ட 1,030 ஆசிரியர் களுக்கு அடுத்த வாரம் பணி ஆணையை முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார். முதல் கட்ட பொறியியல் கலந்தாய்வு முடிந்துள்ளது.

இதில் 10,351 பேர் மாண வர்கள் கலந்து கொண்டு உள்ள னர், அதில் 6,009 பேர் கல்லூரிகளில் சேர்ந்து விட்டனர், தமிழக முதல்வர் மிகத் தெளிவாக சொல்லி இருக் கிறார் புதிய கல்விக் கொள் கையை தமிழக அரசு ஏற்காது, தமிழ்நாட்டிற்கென என ஒரு கல்விக் குழுவை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாட்டின் கல்வித் திட்டம் இருக்கும் அதற்கு எதிராக வேறு பட்ட கருத்து இல்லை , ஆரம்ப கல்வி விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற் கா கவே காலை சிற்றுண்டி திட்டம் கொண்டுவரப்பட்டது.

மூன்றாவது மொழியை ஏற்றுகொள்ள முடியாது என்று தான் புதிய கல்வி கொள்கையில் கூறி இருக்கிறோம். மூன்றாவது மொழி படிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் தேர்வு எழுதும் போது மூன்றாவது மொழி கட் டாயமாக்கப்பட கூடாது. கல்லூரி மாணவர்களிடம் இது குறித்து கருத்து கேட்டபோது இரண்டு மொழி படிப்பதே சிறப்பாக உள்ளது. இதில் மூன்றாவதாக ஒரு மொழி வேண்டாம் என கூறுகின்றனர். மேலும், 5ம் வகுப்பிற்கு பொது தேர்வு என்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Popular Posts
  1. Class 1-12 TN New Text Books 2021-2022 | Click Here

kalvisolai-kalviseithi-padasalai-kalvikural-kaninikkalvi-telegram kalvisolai official group

No comments:

Post a Comment

||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||