விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்களின் பொது மாறு தல் கலந்தாய்வு நாளை (20ம் தேதி) முதல் துவங்குகிறது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) தனசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்டத் தில் செயல்படும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வுக் கான கலந்தாய்வு நாளை முதல் துவங்குகிறது.விழுப்புரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மெட் ரிக் மேல்நிலை பள்ளியில் நாளை துவங்கும் கலந் தாய்வில் காலை மாவட் டத்தில் உள்ள நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும் நடக்கிறது.மேலும் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த் தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள் ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாறுதல் நடக்கிறது.நாளை மதியம் பட்டதாரிகள் மற்றும் தமிழ் ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நடக்கிறது.
மறுநாள் காலை தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மதியம் உயர் நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலை பள்ளிகளில் 6,7,8ம் வகுப் புகளில் பணிபுரிந்து உயர் நிலை பள்ளிக்கு ஈர்த்து கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்கள் மற் றும் அந்த ஒன்றியத்தில் உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஆகியோருக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.வரும் 24ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மாறுதல், இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் மற் றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் நடக்கிறது. அன்று மதியம் இடைநிலை ஆசிரியர்கள் மாவட் டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்த õய்வு நடக்கிறது. 25ம் தேதி காலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வில் மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் மாறுதல் கலந் தாய்விலும், தேர்ந் தோர் பெயர் பட்டியலின் படி பதவி உயர்வுக்கு தகுதி யுள்ள ஆசிரியர்கள் பதவி உயர்விற்கான கலந் தாய்விலும் கலந்து கொண்டு விரும்பும் இடத்தை பூர்த்தி செய்ய லாம். பூர்த்தி செய்யும் ஆசிரியர்களுக்கு அன்றே உரிய ஆணைகள் வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment