
மேற்கண்ட தேர்வுகளுக்கு இதுவரை விண்ணப்பிக்காமல் உள்ளவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இவ்வகை தேர்வர்கள் தேர்வுக் கட்டணம் ரூ.125 உடன், கூடுதல் கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 16ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு அதே நாளில் ஹால்டிக்கெட் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||