மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் சேருவதற்கு கடந்த ஆண்டு (2022) மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வை (கியூட்) பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்தது.
இந்த தேர்வை ஏராளமான பல்கலைக்கழகங்கள் ஆதரித்து வருகின்றன. அந்தவகையில் 206 பல்கலைக்கழகங்கள் இது வரை இந்த தேர்வில் இணைந்திருப்பதாக பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து உள்ளது.
கடந்த ஆண்டை விட 90 பல்கலைக்கழகங்கள் கூடுதலாக இந்த தேர்வை நடத்துவதாகவும் கூறியிருக்கிறது.
இதில் 44 மத்திய பல்கலைக்கழகங்கள், 33 மாநில பல்கலைக்கழகங்கள் முக்கியமானவை எனக் கூறியுள்ள மானியக் குழு, இந்த ஆண்டுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி வரை காலக்கெடு உள்ளதால் மேலும் பல பல்கலைக்கழகங்கள் இந்த தேர்வில் இணையக்கூடும் என்றும் தெரிவித்து உள்ளது.
இந்த ஆண்டுக்கான கியூட் நுழைவுத்தேர்வு மே மாதம் 21 முதல் 31-ந்தேதிக்கு இடையே நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.
Popular Posts
- Class 1-12 TN New Text Books 2023-2024 | Click Here










No comments:
Post a Comment