தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு 26 ஆம் தேதி 09.06.2025 திங்கட்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
இருப்பினும் 09.06.2025 அன்று அரசுத் தேர்வுகள் ஏதேனும் அறிவிக்கப்பட்டிருப்பின், சம்பந்தப்பட்ட மாணவ / மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்களுக்கும், அத்தியாவசிய பணிகளுக்கும் இவ்விடுமுறை பொருந்தாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act, 1881) பொது விடுமுறை நாள் அல்ல எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட கருவூலம் மற்றும் சார்பு கருவூலங்கள் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்கு பதிலாக 14.06.2025 இரண்டாம் சனிக்கிழமை அன்று அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment