2025-26 ஆம் கல்வியாண்டில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிகமாக நியமிப்பது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த தற்காலிக நியமனம் 2025 ஜூன் 2 முதல் நடைமுறைக்கு வரும்.
நியமனத்திற்கான நிபந்தனைகள்:
- நிரப்ப தகுந்த காலிப்பணியிடங்கள் மற்றும் மகப்பேறு விடுப்பு, 6 மாதங்களுக்கு மேல் நீண்ட விடுப்பில் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்கள், மற்றும் மாற்றுப்பணியில் சென்றுள்ள ஆசிரியர்களின் பணியிடங்கள் ஆகியவற்றில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்.
- பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு B.Ed தேர்ச்சியுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் (TET) தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
- முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் B.Ed தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்கலாம்.
- பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் தற்காலிக நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 2025 ஜூன் 2 அன்று பணியேற்க வேண்டும் மேலும் நியமனம் குறித்த விவரங்களை அன்றே திருப்பத்தூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் மற்றும் கையொப்பமிட்ட பிரதியை நேரில் ஒப்படைக்க வேண்டும்.
No comments:
Post a Comment
||| www.new.kalvisolai.com - What’s New Today...Click Here... |||