சென்னை பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வாயிலாக, அரசு பொது வைப்பு நிதி (GPF), பணிக்கொடை (DCRG), மற்றும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் (CPS) நிலுவைத் தொகைகளை விரைவாக முடிப்பது தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
07.05.2025 அன்று நிதித்துறை செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் ஏப்ரல் 2024 முதல் ஏப்ரல் 2025 வரை கணிசமான நிலுவைகள் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டதால், அனைத்து நிலுவைத் தொகைகளையும் 31.05.2025க்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மே 2025 முதல் அக்டோபர் 2025 வரை ஓய்வுபெறவுள்ள பணியாளர்களின் நிலுவைகளையும் தாமதமின்றி முடிக்க வேண்டும். நிலுவைப் பட்டியல்கள் மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
வாராந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், காரணமின்றி நிலுவை வைத்திருக்கும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. IFHRMS குறைபாடுகளைச் சரி செய்யவும், ஓராண்டிற்குள் ஓய்வுபெறுபவர்களின் E-SR அப்டேட் மற்றும் ஓய்வூதிய கருத்துருக்களை விரைவாக அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் Google Meet ஆய்வு நடத்தப்படுவதால், முடிக்கப்பட்ட விவரங்களை Google Sheet இல் பதிவேற்ற வேண்டும். அனைத்து அறிவுறுத்தல்களையும் பின்பற்றி 31.05.2025க்குள் அறிக்கையை அனுப்ப தவறினால் சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பு.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
No comments:
Post a Comment