- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புதிய பேருந்து பயண அட்டை கிடைக்கும் வரை, அவர்கள் பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.சி. சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
- ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. இதை முன்னிட்டு, புதிய கல்வி ஆண்டிற்கான கட்டணமில்லா புதிய பயண அட்டை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
- இந்தப் புதிய அட்டையை அச்சிடும் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.
- புதிய அட்டை கிடைக்கும் வரை, 2024-25 கல்வியாண்டிற்கான அரசுப் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்ட பழைய பயண அட்டையைப் பயன்படுத்தியும் மாணவர்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
- பேருந்துகளை நிறுத்தி மாணவர்களைப் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல நடத்துநர்கள், ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
No comments:
Post a Comment