ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண். 01/2024 நாள் 09.02.2024 இன் படி, இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, போட்டித் தேர்வு 21.07.2024 அன்று நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, WMP.No. 16353/2024 அன்று 18.03.2025 அன்று வழங்கப்பட்ட இடைக்காலத் தீர்மானத்தின்படி, தமிழ் வழித் தேர்வர்களுக்கு மட்டும் தேர்வு முடிவுகள் மற்றும் இறுதி விடைக்குறிப்பு 12.04.2025 அன்று வெளியிடப்பட்டது.
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து அறிவிக்கையின்படி, 1:1.25 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் 30.04.2025 அன்று வெளியிடப்பட்டது. கூடுதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பட்டியல் 13.05.2025 அன்று வெளியிடப்பட்டது. இச்சரிபார்ப்பு 12.05.2025 முதல் 14.05.2025 வரையிலும் மற்றும் 16.05.2025 அன்றும் நடைபெற்றது. சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாத விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு 22.05.2025 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பின் போது விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த கல்விச் சான்றிதழ்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் மற்றும் இதர முக்கிய ஆவணங்கள், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் பணிமுறை விதிகளை பின்பற்றியும், தகுதியான விண்ணப்பதாரர்களைக் கொண்டு இன்று (31.05.2025) தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தமிழ் வழி காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தற்காலிகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் அரசுப் பணிக்கான துறைமூலம் பணி நியமன ஆணைகள் விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்படும்.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
No comments:
Post a Comment