SCHOOL PRAYER ACTIVITIES | பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 08.12.2025 | பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். Please click the link below to download the PDF file.
Note : The Study materials from our website are not created by us. These materials for Educational and Competitive Exam Purpose only. All the credits go to the creators who created them.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
திருக்குறள்: அறிவு (குறள் 422)
குறள்:
சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
விளக்கம்:
மனதை அது சென்ற வழியில் செல்லவிடாமல், தீமையிலிருந்து விலக்கி, நன்மையான வழியில் செலுத்துவதே உண்மையான அறிவாகும்.-----பழமொழி
- ஆங்கிலம்: one honest friend is better than a hundred fake ones.
- தமிழ்: நூறு போலி நண்பர்களை விட ஒரு உண்மையான நண்பன் சிறந்தவன்.
இரண்டொழுக்கப் பண்புகள்
- நான் எனது நோட்டு அல்லது புத்தகத்தில் உள்ள காகிதத்தைக் கிழிக்க மாட்டேன்.
- காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவதுடன் மட்டுமல்லாமல், மறைமுகமாக மரங்களை அழிக்கவும் காரணமாகிவிடும்.
பொன்மொழி
சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான சாப்பாட்டைப் பார்க்கிலும், அமைதியோடே சாப்பிடும் எளிய உணவே நலம்.
சாலமோன் ஞானி-----பொது அறிவு
- இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகப் பணியாற்றியவர் யார்?சர்தார் வல்லபாய் படேல் (Sardar Vallabhbhai Patel).
- இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் நீதிபதிகளைக் கொண்ட உயர்நீதிமன்றம் எது?அலகாபாத் உயர்நீதிமன்றம் (Allahabad High Court).
English Words (சொற்கள் மற்றும் பொருள்)
- curdled - turned sour (திரண்டுபோனது/புளித்தது)
- drop by - to visit someone for a short time (சுருக்கமான நேரம் வந்து செல்லுதல்)
தமிழ் இலக்கணம்: மொழி இறுதி எழுத்துகள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகள் மொழி இறுதி எழுத்துகள் எனப்படும்.
- உயிர் எழுத்துகள்: பன்னிரெண்டு உயிர் எழுத்துகளும் மெய்யுடன் இணைந்து உயிர் மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.
- (எ. கா. –அவரை, பந்து)
- ஆய்த எழுத்து: ஆய்த எழுத்து (ஃ) சொல்லின் இறுதியில் வராது.
- மெய் எழுத்துகள்: ண், ம், ய், ர், ன், ல், ழ், ள் ஆகிய எட்டு மெய்யெழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
அறிவியல் களஞ்சியம்: மனித உடல் & விலங்குகள்
- இரத்த நாளங்கள்: மனித உடலின் அனைத்து இரத்த நாளங்களையும் ஒன்றாகச் சேர்த்தால், அது பூமியை இரண்டு முறைக்கும் மேல் சுற்றக்கூடிய நீளம் கொண்டதாக இருக்கும்!
- விலங்குகளின் திசைகாட்டி: கடல் ஆமைகள், பறவைகள் போன்ற பல விலங்குகள் பூமியின் காந்தப்புலத்தை உணர்ந்து திசையை அறிகின்றன.
- நரம்பு மண்டலம்: மூளையில் இருந்து உடலுக்குச் செல்லும் மின் சமிக்ஞைகளின் வேகம் மணிக்கு 250 மைல்கள் (சுமார் 400 கி.மீ) வரை இருக்கும்.
நீதிக்கதை: கர்வத்தின் விளைவு (நரி மற்றும் சிங்கம்)
ஒரு நரி அதிகாலையில் மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கிலிருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் மிக நீளமாகவும் பெரியதாகவும் தெரிந்தது. "நான் இந்தக் காட்டு ராஜாவான சிங்கத்தை விடவும் பெரியவன்" என்று கர்வத்துடன் எண்ணியவாறே வேட்டைக்குச் சென்றது.
வழியில் இரை உண்ட களைப்பில் மெதுவாக நடந்து வந்த ஒரு சிங்கத்தை நரி கண்டது. தனது நிழல் சிங்கத்தைவிடப் பெரியதாகத் தெரிவதை நினைத்துக்கொண்டு, நரி சிங்கம் வரும் வழியில் கர்வத்துடன் நடந்தது. சிங்கமோ நரியைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்றது.
சிங்கம் தன்னைப் பார்த்து பயந்துதான் சென்றதாக நினைத்து மகிழ்ந்த நரி, அன்றிரவு காட்டு மிருகங்களை அழைத்து, "இனிமேல் இந்தக் காட்டிற்கு நான்தான் ராஜா" என்று அறிவித்தது. யானை இதை ஏற்க மறுக்கவே, நரி காலையில் நடந்த சம்பவத்தைச் சொன்னது. கூட்டத்தில் இருந்த மான், "சிங்கத்தை உன் முன் மண்டியிடச் சொன்னால் உன்னை ராஜாவாக ஏற்கிறோம்" என்றது.
மறுநாள் நரி சிங்கத்தைத் தேடிச் சென்று, சிங்கம் வந்தவுடன், "என் முன்னாள் மண்டியிட்டுச் செல்" என்று கர்வத்துடன் கூறியது. சிங்கமோ கோபம்கொண்டு, "உன்னை மன்னித்து விடுகிறேன், உடனே இங்கிருந்து செல்" என்றது.
சிங்கம் பயந்துவிட்டது என நினைத்த நரி, "முடியாது" என்று பதில் கூறியவாறே தன்னுடைய நிழலைப் பார்த்தது. அது மதிய நேரம் என்பதால் நிழல் உண்மையான அளவில் சிறிதாக இருந்தது. அப்பொழுதுதான் சூரிய ஒளியால் தான் நிழல் பெரியதாகத் தெரிந்தது என்ற உண்மை நரிக்கு விளங்கியது. கர்வத்துடன் பேசிய நரியைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கம், அதை ஒரே அடியில் கொன்றது.
நீதி: முட்டாள்தனமாகப் பெரிதாக யோசித்தால் அதற்கான இழப்பும் பெரிதாக இருக்கும்.-----இன்றைய செய்திகள் (08.12.2025)
தமிழ் செய்திகள்:
- வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 1 கி.மீ நீளத்தில், 4 வழிச்சாலையாக கட்டப்பட்ட இந்த புதிய மேம்பாலத்தைத் திறந்து வைத்தார்.
- இந்தோனேசியாவில் புயல்: சென்யார் புயலால் இந்தோனேசியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 900– ஐ கடந்தது. தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவான இந்தப் புயலில் 410 பேர் மாயமாகியுள்ளனர்.
- அமெரிக்காவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் அமெரிக்காவின் அலாஸ்காவில் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
விளையாட்டுச் செய்திகள்:
- கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு: 2025-ம் ஆண்டு, அதிக கிரிக்கெட் வீரர்கள் (28 பேர்) ஓய்வு பெற்ற ஆண்டாகப் பார்க்கப்படுகிறது.
- டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Today's Headlines (08.12.2025)
- Veeramangai Velunachiyar Flyover: Chief Minister M.K. Stalin inaugurated the new 1 km long, 4-lane flyover, built at an estimated cost of Rs. 150 crore.
- Cyclone Sennyar in Indonesia: The death toll from the cyclone, which formed adjacent to the southern Andaman Islands, has crossed 900. With 410 people missing, the death toll is feared to rise.
- Earthquake in the USA: A powerful earthquake of magnitude 7 on the Richter scale struck Alaska, USA. Despite the strong quake, no tsunami warning was issued.
SPORTS NEWS
- Cricketers Retirement: The year 2025 has seen the highest number of cricketer retirements in a single year, with 28 players retiring.
- Test Cricket: Australia secured a massive 8-wicket victory against England in the 2nd Test match.
















No comments:
Post a Comment