இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
விளக்க உரை:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
பொன்மொழி
"முடிந்தவரை மகிழ்ச்சியுடன் இருங்கள்; கவலைப்படும் மனிதனைக் கண்டு யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள்." - தாமஸ் புல்லர்
பழமொழி
Life is a journey, not a race.
வாழ்க்கை ஓர் பயணம், ஓட்டப்பந்தயம் அல்ல.
அன்றாடப் பண்புகள் (இரண்டொழுக்க பண்புகள்)
- கடலையும் கடல் சார்ந்த பகுதியையும் பாதுகாப்பேன்.
- நெகிழி மற்றும் பிற குப்பைகளை கடலில் வீச மாட்டேன்.
பொது அறிவு
- மின்னஞ்சலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- ரேமண்ட் சாமுவேல் டாம்லின்சன் (Raymond Samuel Tomlinson)
- இந்தியாவில் மிக நீளமான கடற்கரையைக் கொண்ட மாநிலம் எது?
- குஜராத் (Gujarat)
ஆங்கிலச் சொற்கள்
- Simultaneous: ஒரே நேரத்தில் நிகழும் (occurring at the same time)
- Ambigous: தெளிவற்ற (not clear)
தமிழ் இலக்கணம்
முற்றுப்புள்ளி ( . ):
வாக்கியத்தின் முடிவைக் குறிக்கிறது, ஒரு முழுமையான கருத்தை முடித்ததைக் காட்டுகிறது.
எடுத்துக்காட்டுகள்:
- அவன் வந்தான்.
- ஆசிரியர் பாடம் முடித்து விட்டார்.
- அணில் பழம் சாப்பிட்டது.
அறிவியல் களஞ்சியம்: நெருப்புக் கோழி
- உலகின் மிகப் பெரிய பறவை. இது பறக்க முடியாத பறவை.
- பறக்க முடியாவிட்டாலும், மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடக்கூடியது.
- இதன் இறக்கையின் நீளம் 2 மீட்டர் ஆகும்.
- கால்கள் மிக வலிமையானவை. இதன் ஒரு உதை மனிதன் மற்றும் சிங்கத்தைக்கூட கொல்லும் திறன் கொண்டது.
- உலகின் மிகப் பெரிய முட்டை இதன் முட்டை தான். இதன் நீளம் 15 செ.மீ.
சிறப்பு நாள் (டிசம்பர் 15)
வால்ட் டிஸ்னி அவர்களின் நினைவுநாள்
வால்ட் டிஸ்னி (டிசம்பர் 5, 1901 - டிசம்பர் 15, 1966) உலகப் புகழ் பெற்ற ஓவியர், மிக முக்கியமான கார்ட்டூன் ஓவியர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். மிக்கி மவுஸ், டொனால்ட் டக், ஸில்லி சிம்பொனிஸ் போன்றவற்றை உருவாக்கியவர். இவர் தன் அண்ணன் ராய்.ஒ.டிஸ்னியுடன் இணைந்து வால்ட் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் இணை-நிறுவனராக இருந்தார்.
நீதிக்கதை: ஆமையும் நரியும்
கதைச் சுருக்கம்:
ஓடைக் கரையில் வசித்த ஆமையும், புற்றில் குடியிருந்த நாகமும் நண்பர்களாக இருந்தன. ஒருநாள் கம்புடன் வந்த மனிதனைப் பார்த்த ஆமை, நாகத்தை ஓடி மறையச் சொன்னது. நஞ்சுள்ள பாம்பு என்பதால், தான் பயப்படத் தேவையில்லை என நாகம் கூறியது. ஆனால், மனிதன் கம்பால் அடித்ததில் நாகம் அடிபட்டு தப்பியோடியது. மற்றொரு நாள், கம்பு இல்லாத நிலையில் அதே மனிதன் வந்தான். ஆமையின் ஆலோசனைப்படி நாகம் சீறிப் பாய, மனிதன் பயந்து ஓடினான். ஆயுதம் (கம்பு) இருந்தபோது மனிதனுக்குச் சாதகமான நிலைமை இருந்ததால் நாகம் அடங்கி இருக்க வேண்டியிருந்தது. ஆயுதம் இல்லாதபோது நாகத்திற்கே சாதகமான நிலைமை இருந்தது. எனவே, சூழ்நிலை சாதகமாக இல்லாதபோது அடங்கி இருக்க வேண்டும்; சாதகமாக இருக்கும்போதுதான் செயல்பட வேண்டும் என ஆமை அறிவுறுத்தியது.
நீதி:
ஒருவனின் பலம் பலவீனம் இரண்டையும் பார்த்துதான் சண்டைக்குச் செல்ல வேண்டும்.
இன்றைய செய்திகள் (15.12.2025)
தேசியச் செய்திகள்
- புதிய ஆணையம்: அனைத்து உயர் கல்விச் செயல்பாடுகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வகையில் 'விக்சித் பாரத் சிக்ஷா ஆதிக்ஷன்' (Viksit Bharat Shiksha Adhikshan) என்ற புதிய ஆணையத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மக்கள்தொகை கணக்கெடுப்பு: 2027-ல் டிஜிட்டல் முறையில் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ. 11,718 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலச் செய்திகள்
- மனிதக் கடத்தல் அச்சம்: மும்பையில் ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். இது மும்பையை மிரட்டும் மனிதக் கடத்தல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
விளையாட்டுச் செய்திகள்
- U19 ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு 241 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா. மழையின் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
Today's Headlines
⭐ The Union Cabinet has approved the formation of a new authority, Viksit Bharat Shiksha Adhikshan, to bring all higher education activities under one umbrella.
⭐The central government has approved an allocation of Rs 11,718 crore for conducting the census in two phases digitally in 2027.
⭐Human trafficking threatens Mumbai. Children disappear, and 145 children, including 93 girls, have gone missing in Mumbai in the 6 months from June to December.
SPORTS NEWS
🏀U19 Asia Cup: India set Pakistan a target of 241 runs. The start of the match was delayed due to rain.
Please Join our WhatsApp Group, Facebook Group and Telegram Channel to get the latest study materials and news update.
















No comments:
Post a Comment